அமலாக்கத்துறை இயக்குநர் SKமிஸ்ராவின் பதவி காலத்தை நீட்டித்தது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. SK மிஸ்ரா 3வது முறையாக பணி நீட்டிப்பு செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கில், 15 நாட்களில் அமலாக்கத்துறைக்கு புதிய இயக்குநரை நியமனம் செய்ய கூறியுள்ள உச்சநீதிமன்றம், புதிய இயக்குநர் நியமிக்கப்படும் வரை SKமிஸ்ரா ஜூலை 31ம் தேதி வரை மட்டுமே பதவியில் நீடிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது.