டெல்லியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். அங்கு ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறை சென்ற நிலையில் சுப்ரீம் கோர்ட் அவருக்கு ஜாமின் வழங்கியது. இதைத்தொடர்ந்து சிறையில் இருந்து விடுதலையான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முதல் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இந்நிலையில் தற்போது அம் மாநில அமைச்சர் சௌரவ் பரத்வாஜ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது அரவிந்த் கெஜ்ரிவால் நாளை தன் பதவியை ராஜினாமா செய்வார் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் புதிய முதல்வராக அமைச்சர் அதிஷி நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.