
லண்டனில் இருந்து சென்னைக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் மொத்தம் 360 பேர் பயணித்தனர். இந்நிலையில் இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து இந்த விமானம் அவசர அவசரமாக லண்டனிலேயே தரையிறக்கப்பட்டது. இதனால் லண்டனில் இருந்து சென்னை, சென்னையிலிருந்து லண்டன் செல்ல இருந்த 2 பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக இந்த விமானத்தில் முன்பதிவு செய்து இருந்த 700 க்கும் மேற்பட்ட பயணிகள் மிகவும் அவதி அடைந்து உள்ளனர்.