தமிழகத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு பணி வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். ஜூன் மாதத்திற்குள் 10000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் இதுவரை 60,567 இளைஞர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் உள்ளிட்ட upsc தேர்வுகளுக்கான பயிற்சிக்கு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.