
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு 40 எம்.எல்.ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக சபாநாயகர் அப்பாவு கூறியது எப்படி அவதூறாகும்.? அக்டோபர் 22ஆம் தேதிக்குள் பதில் அளிக்க அதிமுக நிர்வாகி பாபு முருகவேல் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அவதூறு வழக்கை தாக்கல் செய்ய என்ன அடிப்படை உரிமம் உள்ளது.? எனவும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.