
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேற்கு வங்கத்தை ஒட்டிய வடக்கு வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நிலப்பகுதியை நோக்கி நகர்ந்து இன்று மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஒடிசா பகுதியில் நிலவுகிறது.
மேற்கு திசை காற்றின் வேகமா மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.