
சரக்கு கப்பலில் பயங்கர தீ விபத்து நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொழும்புவில் இருந்து சிங்கப்பூரை சேர்ந்த சரக்கு கப்பல் மும்பைக்கு சென்றது. இந்த சரக்கு கப்பல் கோழிக்கோடு அருகே நடுக்கடலில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை பார்த்ததும் கப்பலில் இருந்த 18 ஊழியர்களும் கடலில் குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். அந்தக் கப்பலில் பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் இந்திய கப்பற்படை தீவிரமாக ஈடுபட்டது.
இந்த நிலையில் சிங்கப்பூர் சரக்கு கப்பல் வெடித்து சிதறும் அபாயத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குளோரோ பார்மெட், டைமெத்தில்சல்பேட், ஹெக்ஸாமெதிலீன், டிசோசயனேட், பைரிடியம் உள்ளிட்ட ரசாயனங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் உள்ளதால் வெடித்து சிதறலாம் என அச்சம் எழுந்துள்ளது.