உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி 3-வது முறையாக  வெற்றி வாகை சூடியுள்ளார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அம்மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராயை விட 1.39 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

மேலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னிலையில் இருந்த பிரதமர் மோடி இடையில் திடீரென 6000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.