வயநாடு தொகுதியில் சட்டசபை தேர்தல் நடந்த போது  ராகுல் காந்தி அந்த தொகுதியில் வெற்றி பெற்று எம்பி ஆக தேர்வு செய்யபட்டார். அவர் கடந்த தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டதால் ஏதாவது ஒரு தொகுதியில் மட்டும் தான் எம்பியாக நீடிக்க முடியும் என்பதால் வயநாடு தொகுதியில் ராஜினாமா செய்தார். இதனால் வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்று காலை முதல் நாடு முழுவதும் பல்வேறு தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் சட்டசபை தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்தது முதலே வயநாடு தொகுதியில் தொடர்ந்து பிரியங்கா காந்தி முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பிரியங்கா காந்தி கிட்டத்தட்ட ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அந்த தொகுதியில் முன்னிலை வகிக்கிறார். மேலும் இதனால் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தன் வெற்றியை உறுதி செய்து விட்டது என்று கூறப்படுகிறது.