
நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் தமிழக சட்டசபையில் வக்பு வாரிய சட்டத்திருத்தம் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாளை தமிழகம் முழுவதும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அதன்படி நாளை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கவன ஈர்ப்பு மாநாடு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற உள்ளது.