102 மக்களவைத் தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது. இதையடுத்து வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் வாக்களித்து வருகின்றனர்.