மாநிலங்களவை தேர்தலில் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு ஒதுக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் துணை பொதுச்செயலாளர் முனுசாமி தற்போதைக்கு தேமுதிகவுக்கு சீட் ஒதுக்கப்படவில்லை என கூறினார். ஆனால் 2026 ஆம் ஆண்டு மாநிலங்களவைத் தேர்தலில் கண்டிப்பாக ஒரு சீட் ஒதுக்கப்படும் என அறிவித்தார்.

அதுபற்றி பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மாநிலங்களவை சீட் கொடுக்கப்படும் என 2024 ஆம் ஆண்டு கையெழுத்து போட்டுக் கொடுத்தார்கள். ஒப்பந்தம் போடும்போது எந்த ஆண்டில் என குறிப்பிடவில்லை. அப்போதே ஆண்டை குறிப்பிட்டு அளிக்க கூறினோம். ஆனால் ஆண்டு குறிப்பிட்டு அளிப்பது நடைமுறையில் இல்லை என அதிமுக தெரிவித்ததாக ஏற்கனவே ஒரு பேட்டியில் கூறினார்.

இன்று மீண்டும் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியிருப்பதாவது, கூட்டணி ஆட்சி அமைவது வரவேற்புக்குரியது. மாநிலங்களவை சீர்திருவதாக அதிமுக எழுதிக் கொடுத்ததை அரசியல் நாகரிகம் கருதி காட்டாமல் உள்ளோம் என கூறியுள்ளார்.