தேசிய தடவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு இன்றும், நாளையும் நடைபெற இருந்த நிலையில் திடீரென ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது குஜராத்தில் தேசிய தடவியல் அறிவியல் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.

இந்த பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கான நுழைவு தேர்வு இன்றும், நாளையும் நடைபெறுவதாக இருந்த நிலையில் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வுக்கு நான் முதல்வன் திட்டம் மூலமாக தமிழகத்திலும் ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்தனர். தற்போது திடீரென தேர்வு ஒத்தி வைக்கப்படுவதால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் தேர்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.