
மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், என்சிபி தலைவruமான சரத் பவாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் பங்கேற்க உள்ள 4 நாள் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் சரத் பவார் கலந்து கொண்டு பேசினார்.
அப்போதே அவருக்கு கடுமையான இருமல் ஏற்பட்டது. அதன் பிறகு மருத்துவ பரிசோதனை செய்தபோது அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதனால் சரத் பவார் தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார்.