
இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத பாடகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் எஸ்பிபி பாலசுப்பிரமணியம். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவினால் உயிரிழந்தார். இவர் இந்திய மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் தனக்கென நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில் மறைந்த பாடகர் எஸ்பிபியின் நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதல் தெருவிற்கு எஸ் பி பாலசுப்பிரமணியம் சாலை என்ற பெயர் சூட்டப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.