மணிப்பூர் மாநிலத்தின் சந்தேல் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில்,  10 ஆயுதமேந்திய தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால்சுட்டு கொல்லப்பட்டதாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தோ-மியான்மர் எல்லைக்கு அருகிலுள்ள கெங்ஜாய் தாலுகாவில் உள்ள நியூ சாம்தால் கிராமம் அருகே, ஆயுதங்கள் கொண்ட தீவிரவாதிகள் திரண்டிருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், மே 14ஆம் தேதி அசாம் ரைபிள்ஸ் பிரிவினர் (ஸ்பியர் கார்ப்ஸ் கட்டுப்பாட்டில்) முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டனர்.

“>

 

இந்த நடவடிக்கையின் போது தீவிரவாதிகள்  பாதுகாப்பு படையினருக்கு  எதிராக துப்பாக்கிச் சூடு நடத்த, பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்து அவர்களை முற்றிலும் கட்டுப்படுத்தினர். இதனால், 10  தீவிரவாதிகள் சுட்டுத் தள்ளப்பட்டு உயிரிழந்தனர். மேலும், சம்பவ இடத்திலிருந்து மிகுந்த அளவில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், நிலைமை தற்போது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.

“>