
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஓபிஎஸ் உட்பட 35-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் குரல் வாக்கெடுப்பிலும் டிவிஷன் வாக்கெடுப்பிலும் தோல்வியடைந்த நிலையில் மீண்டும் சபாநாயகர் அப்பாவு அவைக்கு தலைமை தாங்கினார். மேலும் நடுநிலையோடு சட்டமன்றம் நடைபெறும் என அப்பாவு கூறினார்.
இந்த நிலையில் பேரவையில் கடன் வாங்காமல் இருக்க அமைத்த குழு என்ன செய்கிறது? அந்த குழு சொன்னபடி நடவடிக்கை எடுத்தீர்களா? என கேள்வி கேட்ட எடப்பாடி பழனிச்சாமியை இடைமறித்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளிக்க முயன்றார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக எழுந்து கடனை மூலதன செலவுதான் செய்ய வேண்டும். அந்த நியதியை நீங்கள் கடைபிடித்தீர்களா? என ஓ பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார்.