பெங்களூருவில் ஐடி ஊழியர் அதுல் சுபாஷ் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதாவது விவாகரத்து ஆன பிறகு போலி வரதட்சனை புகார் கொடுத்துள்ளதாகவும் தன்னை மனைவி மற்றும் அவரின் குடும்பத்தினர் தொடர்ந்து டார்ச்சர் செய்வதாகவும் கூறி அவர் லைவில் தற்கொலை செய்து கொண்டார். அதோடு 21 பக்க கடிதங்களையும் எழுதி வைத்துள்ளார்.

இது தொடர்பாக அதுல் சுபாஷின் மனைவி மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். அவர்கள் தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது ஹரியானாவில் வைத்து அதுல் சுபாஷின் மனைவி நிகிதா, மாமியார் மற்றும் மைத்துனர் ஆகியோரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் தற்கொலை செய்து கொண்ட சுபாஷுக்கு கண்டிப்பாக நீதி வாங்கி கொடுப்போம் என்று கர்நாடகா போலீஸ் உறுதி கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.