புதுச்சேரி சட்டப்பேரவையில் பா.ஜ.க-வின் மூன்று நியமன எம்.எல்.ஏ.க்கள் திடீரென ராஜினாமா செய்த சம்பவம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க.வின் மாநில கட்டமைப்பில் மேம்பாடுகளை செய்யும் நோக்கத்தில் கட்சி மேலிடம் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் மூன்று நியமன எம்.எல்.ஏ.க்கள் – வி.பி. ராமலிங்கம், அசோக் பாபு, வெங்கடேசன் ஆகியோர் சட்டப்பேரவைக் சபாநாயகர் செல்வத்தை நேரில் சந்தித்து தங்களது ராஜினாமா கடிதங்களை ஒப்படைத்தனர்.

இந்த நிலையில், அவர்கள் ராஜினாமா ஏற்கப்பட்டதா என்பது குறித்து தற்போது வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. எனினும், இந்த முடிவுகள் பா.ஜ.க.-வில் புதிய பொறுப்புகளுக்கான வாய்ப்புகளைத் திறக்கக்கூடும் என கருதப்படுகிறது.

தற்போது புதுச்சேரியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் சாய் சரவணகுமார் ராஜினாமா செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. பாஜகவை சேர்ந்த சரவணகுமார் தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் ரங்கசாமியிடம் கொடுத்துள்ளார். தலைமை கூறியதால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக சாய் சரவணகுமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.