மீண்டும் பதவி ஏற்கும் வகையில் பிரதமர் பதவியை மோடி ராஜினாமா செய்துள்ளார். குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை அவரது இல்லத்தில் சந்தித்த மோடி, ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இன்று மாலை நடைபெற இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு மீண்டும் பிரதமராக பதவி ஏற்க அவர் உரிமை கோருவார் என தெரிகிறது.