
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருவதால் தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். நாளுக்கு நாள் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். நேற்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த நிறுவனர் ராமதாஸ் தனது மூச்சு இருக்கும் வரை நான் தான் பாமக தலைவராக இருப்பேன் என கூறினார்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பாமகவில் இருந்து விலகி 50-க்கு மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர் பாமக விவசாய அணி தலைவர் வீராசாமி தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் சிவி சண்முகம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இதனால் பாமக நிர்வாகிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.