பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் இராவணனை பதவியில் இருந்து நீக்கி அதற்கு பதிலாக முரளி சங்கர் என்பவரை புதிய பொதுச் செயலாளராக அறிவித்துள்ளார்.

அன்புமணி மீது பல அடுக்கடுக்கான குற்ற சாட்டுகளை முன்வைத்து வரும் ராமதாஸ் தான்தான் கட்சியின் தலைவர் என்று கூறியுள்ளார். அதோடு அரசியலில் வாரிசு இல்லை என்பதால் கட்சியை நான் யாரிடம் வேண்டுமானாலும் ஒப்படைப்பேன் நான் உயிரோடு இருக்கும் வரை நான் தான் பாமக கட்சியின் தலைவராக இருப்பேன் என்றும் கூட்டணி குறித்தும் நான்தான் முடிவு செய்வேன் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் பாமக கட்சியின் எம்எல்ஏ அருள் ராமதாஸ் தலைமையில் இருப்பதுதான் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்றும் அவர்தான் தெய்வம். அவர் சொல்படியே நாங்கள் நடந்து கொள்வோம் என்று கூறியுள்ளார். மேலும் முன்னதாக வடிவேல் ராவணனை கடத்தி சொகுசு ஹோட்டலில் சகல வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து அவரை மகிழ்ச்சியாக வைத்திருப்பதாக ராமதாஸ் கூறிய நிலையில் அவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 100 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றார்.

மேலும் இதைத் தொடர்ந்து தற்போது பாமக கட்சிக்கு புதிய பொது செயலாளரை அறிவித்து ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.