
சென்னையில் உள்ள மதிமுக கட்சி அலுவலகத்தில் மர்ம நபர் ஒருவர் தீயணைப்பு துறை வீரர் உடையில் வந்து தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் அத்துமீறி கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்த நிலையில் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். அவர் தீயணைப்புதுறை வீரர் உடையில் வந்த நிலையில் மேல் சட்டையை மட்டும் கழட்டி வைத்திருந்தார்.
அந்த நபரை அங்கிருந்தவர்கள் உடனடியாக பிடித்த நிலையில் பின்னர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அவரை பிடித்து தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அதிமுக கட்சி அலுவலகத்திற்கு தற்போது போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது