
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, கால்நடை உள்ளிட்ட மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இந்த நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இன்று மதியம் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெறும் நீட் தேர்வை எழுத 22 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்திலிருந்து 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த நிலையில் நீட் தேர்வு குறித்து பாமக அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, நீட் தேர்வு நடத்தப்படுவது எதற்காக என்பதே தெரியாமல் அதை நடத்திக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. நீட் தேர்வால் மருத்துவக் கல்வியின் தரம் உயரவில்லை.
நீட் தேர்வால் மருத்துவக் கல்வி வணிகமயமாவது குறையவில்லை. மாறாக இந்த இரு சிக்கல்களும் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதை தெரிந்து கொண்டும் நீட் தேர்வை நடத்தியே தீருவோம் என ஒன்றிய அரசு பிடிவாதம் படிப்பது நியாயமல்ல என கூறியுள்ளார்.