தமிழகத்தில் ஊதிய உயர்வு உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்த போக்குவரத்து சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சு வார்த்தை இன்று தோல்வியில் முடிந்துள்ளது. ஊழியர்கள் கோரிக்கையை அரசு ஏற்க மறுத்ததை தொடர்ந்து தமிழகத்தில் நாளை திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் நாளை அரசு பேருந்துகள் இயங்காத சூழல் உருவாகியுள்ளது.