
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் கமல்ஹாசன் தக்லைப் என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படம் கடந்த ஐந்தாம் தேதி வெளியானது. ஆனால் கர்நாடகாவில் மட்டும் அந்த படம் வெளியாகவில்லை. அதாவது நடிகர் கமல் தமிழ் மொழியிலிருந்து தான் கன்னட மொழி உருவானது என கூறிய நிலையில் அது கர்நாடகாவில் சர்ச்சையாக மாறிய நிலையில் அவர் மன்னிப்பு கேட்டால்தான் படம் ரிலீஸ் ஆகும் என்று கூறினர்.
இது தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடிகர் கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்த நிலையில் நடிகர் கமல் மன்னிப்பு கேட்டால் தான் படத்தை வெளியிட அனுமதி கொடுக்க முடியும் என கூறிவிட்டனர். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டு வேண்டும் என கூறுவது உயர்நீதிமன்றத்தின் வேலை அல்ல. எப்படி உயர்நீதிமன்றம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூற முடியும்.
தக்லைப் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது. இந்த திரைப்படத்தை வெளியிட அனுமதிப்பது சட்டப்படியானது. எனவே திரைப்படம் வெளியாகும் தியேட்டர்களில் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் கடமை. ஒரு படத்தை வெளியிட சான்றிதழ் கொடுத்த பிறகு அதனை அனுமதிக்க மறுப்பது குற்றம். எனவே படம் பார்த்த பிறகு அதனை ஏற்க வேண்டுமா இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்று நீதிமன்றம் கூறியது. மேலும் கர்நாடகாவில் படத்தை திரையிட வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியதோடு படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.