அஜித் குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில், தனது இசை அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டிய இசை அமைப்பாளர் இளையராஜா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

இதில், ரூ.5 கோடி இழப்பீடு கோரி ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியதாகவும், அதற்கு தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்கும்போது, பாடல்களை பயன்படுத்துவதற்கான சட்டபூர்வ உரிமையாளர் யார் என்பதைக் கூறாமல், உரிமையாளரிடமிருந்தே அனுமதி பெற்றதாக மட்டும் தெரிவித்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.