ஒடிசாவை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்திலும் பாஜக கூட்டணி அமைக்கும் முயற்சி தோல்வியடைந்துள்ளது. சிரோன்மணி அகாலி தளத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட பாஜக நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. 2022 ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக அகாலி தளம் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் மீண்டும் இணைய மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் பாஜக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.