புதுக்கோட்டை திருமயத்தில் தேர்தல் பணி முடிந்து வீடு திரும்பிய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகம் (55) மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். நேற்று முழுவதும் கடும் வெயிலில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்ட அவர், தேர்தல் முடிந்து பேருந்தில் ஏற முயன்றபோது மாரடைப்பு ஏற்பட்டு, அந்த இடத்திலேயே உயிரிழந்தார். வாக்குச் செலுத்த வந்தோர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டோர் என மொத்தம் 4 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்