தமிழ்நாட்டின் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு விவரம் குறித்து சற்று நேரத்தில் (3 மணிக்கு) தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளார். பல மக்களவைத் தொகுதிகளில் இறுதிக்கட்ட வாக்குபதிவு தரவில் மாறுபாடு இருந்தது. இந்த வித்தியாசம் ஏன் என்று இதுவரை தேர்தல் ஆணையம் சார்பில் விளக்கமளிக்காதது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இந்நிலையில் இதுதொடர்பாக சாகு விளக்கமளிக்கவுள்ளார்.