நாடாளுமன்றத் தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையர்களாக ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சந்து பதவியேற்ற நிலையில், தேர்தல் அட்டவணை வெளியாகவுள்ளது. நாடு முழுவதும் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து முடித்துள்ளது. ஏப்ரல் 2வது வாரத்தில் தேர்தலை நடத்த ஆணையம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது