
திமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கும்மிடிப்பூண்டி கி.வேணு மறைந்தார் என்ற துயரச் செய்தியை கேட்டு துடிதுடித்து போனேன் என முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். மிசாவை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு சிறை சென்ற போராளி கி.வேணு என புகழாரம் சூட்டிய ஸ்டாலின், அவரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், தொகுதி மக்களுக்கும் ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன். என கூறியுள்ளார்.