
கள்ளக்குறிச்சியில் தீபாவளி சீட்டு மற்றும் ஏலச்சீட்டு நடத்தி 2 கோடிக்கு மேல் பண மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த சூரிய மகாலட்சுமி மற்றும் சிவகுமார் ஆகியோரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
பாஜக கட்சியைச் சேர்ந்த சூரிய மகாலட்சுமி முன்னாள் நகர் மன்ற தலைவராகவும், சிவக்குமார் மாவட்ட பாஜக தரவு தள மேலாண்மை முன்னாள் துணைத் தலைவராகவும் இருந்தவர்.மேலும் இவர்கள் பொதுமக்களிடம் தீபாவளி சீட்டு நடத்தி 2 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த நிலையில் அவர்களை தற்போது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.