தமிழ்நாடு நிலச்சீர்திருத்த (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமை வழங்கும் வகையில், சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள திருமணமாகாத மகள்கள், திருமணமாகாத பேத்திகள் என்ற சொற்கள் நீக்கப்படும் என்று அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ரூ.30 லட்சம் மதிப்பில் புதிய நிலநடுக்க கண்காணிப்பு நிலையம் அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.