ஒருஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதியில் பிரசித்தி பெற்ற ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு சொர்க்கவாசல் தரிசன டிக்கெட்டை பெறுவதற்கு ஏராளமான பக்தர்கள் நின்று கொண்டிருந்தனர்.

இந்த இலவச தரிசன டோக்கனை பெறுவதற்கு ஏராளமான பக்தர்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்திற்குள் டிக்கெட் பெற நுழைந்த பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துவிட்டார். இவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மல்லிகா என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.