
தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வைகோ, சண்முகம், வில்சன், எம்.எம் அப்துல்லா, அன்புமணி, சந்திரசேகரன், ஆகிய 6 உறுப்பினர்களின் பதவி ஜூலை 24-ஆம் தேதி உடன் நிறைவு பெறுவது குறிப்பிடத்தக்கதாகும். இந்த ஆறு மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.