தமிழகத்தில் மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை இளநிலை மருத்துவ கல்வி வாரியம் ரத்து செய்துள்ளது. சற்றுமுன் வெளியாகிய இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஸ்டாலின், திருச்சி கே ஏ பி விஸ்வநாதன், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

ஏற்கனவே நீட் தேர்வால் மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாமல் தவித்து வரும் நிலையில் தற்போது வெளியாகி உள்ள இந்த அறிவிப்பு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.