
தமிழக அரசு நீண்ட காலமாக சிறையில் இருக்கும் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் இந்த தீர்மானத்தை ஆளுநர் ரவி நிராகரித்து சிறையில் இருக்கும் கைதிகளை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆளுநர் அமைச்சரவைக்கு கட்டுப்பட்டவர் தான் என்று கூறினார். மேலும் கைதிகளை விடுவிக்கும் மனுவை மீண்டும் பரிசீலனை செய்யுமாறு நீதிபதிகள் கூறி வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.