இன்ஃப்ளூயன்சா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் இன்று  முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வில் ஐம்பதாயிரம் மாணவர்கள் பங்கேற்காதது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் இன்னும் சற்று நேரத்தில் அவசர ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடத் தேர்வில் ஐம்பதாயிரம் மாணவர்கள் ஆப்செண்ட் ஆனது குறித்தும் வைரஸ் காய்ச்சல் எதிரொளியாக எட்டாம் வகுப்பு வரை விடுமுறை அளிப்பது குறித்தும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.