
சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த நிலையில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டதால் பள்ளி மாணவிகள் சிலர் மயங்கி விழுந்தனர். இதனால் ஆசிரியர்கள் உடனடியாக மாணவ மாணவிகளை பள்ளியை விட்டு வெளியே கூட்டி சென்றனர். இதற்கிடையே மயக்கம் அடைந்த மாணவிகளை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.