
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது சமூக வலைதள பக்கத்தில் கூரியிருப்பதாவதுல், தலைவாசலில் கரும்புத் தோட்டத்தில் கான்கிரீட் சாலையில் கோட் ஷூட் அணிந்து நடந்து சென்ற போலி விவசாயி நான் அல்ல.
பிறந்தது முதல் இன்றுவரை எனது குடும்பம் விவசாயக் குடும்பம், நான் ஒரு விவசாயி எனபதை பெருமையாகக் கூறுவதோடு, இன்றும் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். விவசாயிகளின் கஷ்டங்களை முழுமையாக அறிந்தவன்.
விவசாயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாத, விவசாயிகளின் கஷ்டத்தையும், வியர்வையையும், வேதனையும் அறியாத ஒரே முதலமைச்சர், விளம்பரம் மூலம் ஆட்சி புரியும் திரு.ஸ்டாலின் மட்டுமே.
‘நான் உண்மையான விவசாயியா ? நீங்கள் உண்மையான விவசாயியா?’ நீங்கள்தான் போலி விவசாயி என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள். எனவே, எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலினுக்கு இல்லை என கடுமையாக விமர்சித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கூறியதாவது, விவசாயிகள் நலனுக்காக தனி பட்ஜெட்டையே சட்டமன்றத்தில் தாக்கல் செய்யும் நடைமுறையை கொண்டு வந்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்களை எப்போதும் நிறுத்தியதில்லை.
விவசாயிகளை வஞ்சிக்கும் 3 வேளாண்மை சட்டங்களை கொண்டு வந்த போது அதனை ஆதரித்து தினமும் கதாகாலட்சேபம் நடத்தியவர் எடப்பாடி பழனிச்சாமி. எனவே உழவர்களின் துரோகி யார் என்பதை விவசாயிகள் நன்கு அறிவார்கள் என எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார்.