புதிய இந்தியாவின் டிஜிட்டல் வழிப்பறி செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே 21,000 கோடிக்கு மேல் ஏழைகளிடம் பறித்துள்ளார்கள் என கூறிய அவர், சிறுக சிறுக சேர்த்த பணத்தை செல்லாததாக்கி வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்தார்கள். ஆனால் ஏழைகளுக்கான அரசு என கூசாமல் பிரதமர் மோடி புளுகுகிறார் என விமர்சித்துள்ளார்.