தமிழ்நாட்டில் டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை செய்தி வெளியிட்ட நிலையில் அமலாக்கத்துறை சோதனைக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை இல்லை என கூறியதோடு தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் அனைத்து வரம்புகளையும் அமலாக்கத்துறை மீறுவதாக கண்டனம் தெரிவித்தார். மேலும் டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை சோதனைக்கும் தடைவிதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணையின் போது அனைத்து வரம்புகளையும் அமலாக்கத்துறை மீறுவதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்த நிலையில், தனிநபர் வழக்கு என்பது வேறு ஒரு நிறுவனத்திற்கு எதிரான வழக்கு என்பது வேறு. ஆனால் நிறுவனத்திற்கு எதிராக எப்படி கிரிமினல் வழக்கை பதிவு செய்ய முடியும். மேலும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக அமலாக்கத்துறை செயல்படுகிறது என்று நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.