
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்த நீதிபதி ஆறுமுகச்சாமி ஆணையத்தின் அறிக்கையில் முன்னாள் சுகாதார அமைச்சர் விஜய பாஸ்கர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகளை நீக்கி, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
”ஜெயலலிதா மரணத்தில் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரை குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து அவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும்” என விசாரணை அறிக்கையில் கூறப்பட்டிருந்ததற்கு எதிராக விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்
இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், விசாரணை அறிக்கையில் விஜயபாஸ்கர் குறித்த கருத்துகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், விசாரணை அறிக்கையில் இருந்து விஜயபாஸ்கர் குறித்த கருத்துகளை நீக்கி நீதிபதி இளந்திரையன் உத்தரவு