நாம் தமிழர் கட்சியிலிருந்து சமீபகாலமாக ஏராளமான நிர்வாகிகள் விலகி வருகின்றனர். கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட நிர்வாகிகள் கூட விலகிய நிலையில் அதன் பிறகும் முக்கிய பொறுப்புகளில் இருந்த ஒருங்கிணைப்பாளர்களும் விலகினர். குறிப்பாக மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாளர், இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் என பலர் விலகினர்.

இருப்பினும் சீமான் கட்சியிலிருந்து விலகுபவர்களை பற்றி கவலைப்பட போவது கிடையாது என்று அறிவித்துள்ள நிலையில் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சம அளவில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியிலிருந்து மேலும் ஒரு நிர்வாகி விலகியுள்ளார். அதாவது நாம் தமிழர் கட்சியிலிருந்து சேலம் மாவட்ட தலைவர் கண்ணன் தற்போது விலகியுள்ளார். மேலும் இது சீமானுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.