
ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.இந்த தொகுதியில் ஈவெரா திருமகன் வெற்றி பெற்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்ற நிலையில் இவரும் கடந்த வருடம் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் அந்த தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் வந்த நிலையில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி இடையே நேரடி போட்டி என்பது உருவானது பிற கட்சிகள் போட்டியிடவில்லை.
அதன்படி திமுக வேட்பாளராக விசி சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக சீதாலட்சுமியும் போட்டியிட்ட நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தொடர்ந்து திமுக கட்சி முன்னிலை வகிக்கிறது. நாம் தமிழர் கட்சி பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் தற்போது தபால் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் திமுக 197 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 13 வாக்குகளையும் பெற்றுள்ள நிலையில் நோட்டா 18 வாக்குகளை பெற்றுள்ளது. நோட்டா என்பது வாக்களிக்க விரும்பாதவர்கள் தேர்வு செய்யக்கூடிய தாகும்.மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சியை பின்னுக்கு தள்ளி நோட்டா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.