கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் பாண்டியக்காடு கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பதை புனேவில் உள்ள தேசிய வைரலாஜி நிறுவனம் உறுதி செய்துள்ளது. கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அந்த சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து பாண்டிகாடு மற்றும் சிறுவன் படித்த  பள்ளி உள்ள அனக்காயம் கிராமங்களில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.