புதுக்கோட்டை மாவட்டம் ரமண சமுத்திரம் அருகே திருச்சி மற்றும் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சிமெண்ட் ஏற்றிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து பக்தர்கள் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மூன்று வயது சிறுமி உட்பட 19 பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைவரும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.