
தமிழகத்தின் முதல்வராக 2 முறை இருந்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி தன்னுடைய கடின உழைப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர். அதிமுக கட்சியை தொடங்கிய முதல் ஆணிடிலேயே வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதல்வராக அவர் உயிரோடு இருக்கும் வரை பதவியில் இருந்தார். கட்சி தொடங்கிய உடனே முதல்வராக பதவியில் அமர்ந்து நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தவர் எம்ஜிஆர். பாரத ரத்னா புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உடல்நல குறைவின் காரணமாக காலமான நிலையில் பின்னர் கட்சியின் தலைவராக அம்மையார் ஜெயலலிதா பொறுப்பேற்றார்.

இந்நிலையில் எம்ஜிஆரின் உதவியாளர் மகாலிங்கம் தற்போது உடல் நலக்குறைவினால் காலமானதாக செய்தி வெளியாகியுள்ளது. இவருக்கு 75 வயது ஆகும் நிலையில் இவரது மறைவுக்கு தற்போது பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் இவர் நேற்று இரவு 11 மணி அளவில் உடல் நலக்குறைவினால் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.