தமிழ்நாட்டு மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டி இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவங்கள் என்பது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் இன்று அதிகாலை தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த அட்டூழியம் செய்துள்ளனர்.

அதாவது வடக்குமன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்து விட்டு ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை அனைத்து மீனவர்களையும் கைது செய்ததோடு அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. அவர்கள் அனைவரையும் மன்னார் மீன்வளத்துறையிடம் ஒப்படைத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் நேற்று அனுமதி சீட்டு பெற்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி இலங்கை கடல் படையினர் தமிழக மீனவர்களை கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.